Tuesday, 22 October 2019

முதிர்ச்சி / பக்குவம் என்றால் என்ன?



1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை நாமே திருத்திக்கொள்வது.


2. அனைவரையும் அப்படியே  ஏற்றுக்கொள்வது. (அவர்களின் நிறை-குறைகளுடன்)


3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.


4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.


5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.


6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.


7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.


8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.


9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.


10. மன அமைதியை அடைதல்.


11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.


12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.

13.  என்ன நடக்குமோன்னு நினைச்சா பயம்... என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்னு நினைச்சா தைரியம்... இவ்ளோதான் வாழ்க்கை.

காலம் போனால் வருமா?

கோச்ரப் ஆசிரமத்தில் காந்தியடிகள் தங்கியிருந்தகாலம். காலம் தவறாமல் ஆசிரமத்துக்கு நன்கொடை வழங்கிவரும் செல்வந்தர் ஒருவர் ஆசிரமத்தில் காந்தியடிகளை சந்திக்க அவகாசம் கேட்கிறார்.

காலை 8.30 மணிக்கு சந்திப்புக்கான நேரம் உறுதி செய்யப்படுகிறது. மறுநாள் காலை 8 மணிக்கே ஆசிரமத்தை அடையும் செல்வந்தர் காந்தியை சந்திக்கும் விருப்பத்தை காந்தியடிகளின் செயலரிடம் தெரிவிக்கிறார். செயலரோ, “தயவு செய்து அமருங்கள். பாபு தங்களை 8.30மணிக்கு சந்திப்பார்” என்று நிதானமாகச் சொல்கிறார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கும் செல்வந்தர் காந்தியடிகளின் அறைக்குள் மெல்ல எட்டிப் பார்க்கிறார். அதிர்கிறார். பாபு கோதுமையில்இருக்கும் குறுணைகளையும், கற்களையும் நீக்கி சுத்தம் செய்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்.

time-is-gold

சரியாக 8.30 மணிக்கு பாபு வரவேற்பறைக்கு வருகிறார். பாபுவிடம் சிறிதுநேரம் உரையாடிய பிறகு தான் வந்த நோக்கத்தை நிறைவு செய்துகொள்கிறார் செல்வந்தர். பின்னர்கிளம்பும் முன் பாபுவிடம் தயங்கியவாறே, “பாபு... நான் மிகவும் பணிச்சுமை உள்ளவன் என்பது தாங்கள் அறிந்ததே. நான் 8 மணிக்கெல்லாம் ஆசிரமத்தை அடைந்துவிட்டேன். ஆனாலும் 30 நிமிடம் காத்துக்கொண்டிருக்க வேண்டியாதாகிவிட்டதே. அதேநேரம் தாங்களும் ஏதும் முக்கியமான பணியில் இருந்ததாக தெரியவில்லை. கோதுமையைத்தான் தூய்மை செய்துகொண்டிருந்தீர்கள். என்னை சந்தித்துவிட்டு அதைச் செய்திருக்க கூடாதா” என்றார்.

பாபுவும் புன்னகைத்துக்கொண்டே சொன்னார் “நான் தங்களைச் சந்திக்க ஒப்புக்கொண்ட 8.30-க்கு சரியாகச் சந்தித்துவிட்டேன். ஒரு வேளை நீங்கள் 8 மணிக்கு வருவதாக நேற்றே தெரிவித்திருந்தால் அதற்கேற்றபடி திட்டமிட்டிருப்பேன். இது கோதுமை தூய்மை செய்வதோடு மட்டும் சம்மந்தப்பட்டதல்ல. அதை அரைத்து மாவாக்க வேண்டும். பின்னர் ஆசிரமத்திலுள்ள அனைவருக்குமான உணவு தயாரிக்கவேண்டும். எனக்கான பணியின் காலதாமதத்தால் அனைத்தும் காலதாமதமாகும். அதை நான் ஒரு போதும் விரும்புவதில்லை. மன்னிக்கவும் உங்களுக்கு உங்களுடைய நேரத்தின் அருமையும் தெரியவில்லை. என்னுடைய நேரத்தின் அருமையும் புரியவில்லை” என்று முடித்தார் காந்தி. செல்வந்தர் தவறை உணர்ந்தார்.

Translate