Thursday, 17 June 2021

கடவுள் என்பவர் யார்?

 




சக்தி மிக்க மூலிகை

 


உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள இந்த குறியீடுகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?


நாம் பயன்படுத்தும் ரேஷன் அட்டை ஒரே மாதிரியாக இருந்தாலும் அதில் பல வித்தியாசங்கள் உள்ளது. அதில் சில குறியீடுகளை அரசாங்கம் வைத்திருக்கும். அதற்கான அர்த்தங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அதைப்பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

ரேஷன் அட்டை நமக்கு ஒரு அடையாள அட்டையாக இருந்து வருகிறது. தற்போது ஸ்மார்ட் கார்டு என்ற பெயரில் ஒரு அட்டையை கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. குடும்ப வருவாயைப் பொறுத்து அவை வகை படுத்தப்பட்டுள்ளது. எல்லா ரேஷன் கார்டும் ஒன்று போல் இருந்தாலும், அதன் குறியீட்டு மூலம் தான் எந்த வகை அட்டை என்பதை அறிய முடியும்.

PHH (Priority house hold) - முன்னுரிமை உள்ளவர்கள்:

உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் 8 கிலோ அரிசியை மாதத்திற்கு பெற்று கொள்ளலாம். இந்த வகையில் மட்டும் 76,99,940 கார்டுகள் உள்ளன.

PHH - AAY ( Priority house hold- Antyodaya Anna Yojana):

இந்த வகையான ரேஷன் கார்டுகள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு தரப்படும். இவர்களுக்கு 35 கிலோ அரிசி குறைந்த விலையில் வழங்கப்படும். மேலும் இந்த வகையான அட்டைகள் விதவை, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு வழங்கப்படும். இந்தக் கார்டை 18,64,600 குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


NPHH ( Non Priority House Hold) - முன்னுரிமை இல்லாதவர்கள்:

உங்கள் ரேஷன் கார்டில் NPHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். இந்த வகையில் மட்டும் 90,08,842 கார்டுகள் உள்ளன.


NPHH-S:

ரேஷன் கார்டில் NPHH-S எனக் குறிப்பிட்டு இருந்தால் அரிசியை தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மட்டும் வாங்கலாம். இந்த கார்டை 10,01,605 குடும்பங்கள் வைத்துள்ளனர்.


NPHH-NC:

ரேஷன் கார்டில் இந்தக் குறியீடு இருந்தால் எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஒரு அடையாள அல்லது முகவரிச் சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஆதார் எண்ணை வைத்து வாங்கப்பட்ட மொபைல் எண் அறிய வேண்டுமா?


உங்கள் பெயரில் உங்களது ஆதார் எண்ணை  வைத்து வாங்கப்பட்ட அனைத்து சிம் கார்டுகளின் விவரங்கள் கீழே உள்ள தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அவற்றுள் உங்களுக்கு தெரியாமல் உங்கள் ஆதார் எண்ணை திருட்டுத்தனமாக பயன்படுத்தும் சிம் கார்டுகளை நீங்கள் தடை செய்ய முடியும். இது இந்திய அரசின் ஒரு நல்ல சேவை. 


https://tafcop.dgtelecom.gov.in/


மேலே உள்ள தளத்தை உங்கள் மொபைலில் ஓபன் செய்து உங்கள் மொபைல் எண்ணை டைப் செய்து வரும் OTP யை உள்ளீடு செய்ய உடனே உங்கள் ஆதார் எண்ணைக் கொண்டு வாங்கப்பட்டுள்ள அனைத்து சிம் கார்டுகளின் எண்களும் உங்களுக்கு தெரியும். அவற்றில் எதை வேண்டுமானாலும் நீங்கள் தடை செய்ய முடியும். நல்ல சேவை. இன்றே பயன்படுத்துங்கள்.

Translate