உணவே மருந்தாகி இருந்த காலம் மலையேறி
மருந்தே உணவாகி விட்ட காலம் ஆனது கசப்பான உண்மை. பசிக்கு மட்டுமே உண்ணும் வழக்கம் இன்றி, உண்ணும் உணவு
நம் உடலுக்கும் தட்ப வெட்பத்துக்கும் ஏற்றவாறு அமையப்பெற்றது நம் நாட்டின் உணவு
பழக்கவழக்கங்களின் தனிச்சிறப்பு. நம் உணவு வகைகளின் அருமை பெருமைகளை போதிய அளவு நம்
இளையதலைமுறைக்கு எடுத்து சொல்ல ஆளில்லாததால் மேற்கத்திய நாடுகளின் உணவு வகைகளின்
மீது நம்மவர்க்கு மோகம் அதிகரிக்க காரணமாகிவிட்டது. அதற்கு நம் அரசாங்கமும் துணை
நிற்பது துரதிஷ்டம்.
உடலுக்கு தீங்கு இழைக்காததோடு
வலு சேர்க்கும் கம்மங்ககூழும், திணை அரிசியும் அலங்கரித்த நம் உணவு
பழக்கவழக்கங்களில் சத்து இல்லாத பாலிஷ் செய்யப்பட்ட அரிசி கலந்தது அவலம். பீட்ஸாவும்,
பர்கரும் மட்டுமே உடலுக்கு கேடு விளைவிக்ககூடியவை அல்ல. பார்க்க பளிச்சென்று
இருப்பதற்காக பாலிஷ் செய்யப்பட அரிசியும், மைதா கலந்த கோதுமை மாவும் பிஸ்கட்
வகைகளும், ரசாயனம் கலந்த ஜூஸ் வகைகளும் கூட உடலுக்கு பல உபாதைகள் தரக்கூடியவையே.
சுதந்திரத்துக்கு
பிறகு ஏற்ப்பட்ட உணவு பஞ்சத்தை போக்க நம் அரசாங்கம் நிறைய உற்பத்தியை
நோக்கி நகர்ந்ததே தவிர நிறைவான உற்பத்தியை மறந்தது. இதை
பயன்படுத்திக்கொண்டு வெளிநாட்டு கம்பெனிகள் தாங்கள் தயாரித்த ரசயான உரங்களையும், மறுமுறை
விதைக்க முடியாத மலட்டு விதைகளையும் பயன்படுத்த நம் விளைநிலங்களை சோதனைக்கூடம்
ஆக்கிவிட்டன. இதனால் நம் இயற்கை விவசாயம் பாதிக்கப்பட்டதோடு தற்போது அழிந்துவிடும்
சூழ்நிலையில் உள்ளது.
மனித உயிர்களின்
மீது அக்கறையுள்ளவர்களின் முயற்சியால் மீண்டும் வெகுசிலர் இயற்கை விவசாயத்தை (Organic Farming) நோக்கி செல்லதொடங்கியுள்ளது ஒரு ஆரோக்கியமான
ஆரம்பம். அரசாங்கத்தின் உதவி இல்லாததால் இதை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல்
போயிற்று. ரசாயன உரங்களை போட்டு மலடான நம் நிலங்களை மீட்டெடுத்து இயற்கை
விவசாயத்துக்கு திருப்ப கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகும். தினசரி
வாழ்வாதாரத்துக்கே போராடும் நம் விவசாயிகள் அவ்வுளவு காலம் பொருளாதாரம் இன்றி
தவிக்க இயலாது. இவையெல்லாம் தாண்டி சிலர் மட்டுமே இயற்கை முறையில் விவசாயம் செய்ய
துணிந்துள்ளதால் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களின் விலைகள் மற்ற
பொருட்களின் விலையை விட அதிகமாக இருக்க காராணமாகிறது. உடல் ஆரோக்கியத்தை
கருத்தில்கொண்டு இந்த விலை வித்யாசத்தை மக்கள் பொருட்படுத்தாமல் ஆதரவு
தருவார்களேயானால் காலம் செல்ல செல்ல இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கும்
பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்புண்டு.
அந்த வகையில் யோகா குரு பாபா ராம்தேவின் முயற்ச்சியால் "பதஞ்சலி"
பொருட்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருவது வரவேற்கத்தக்கது. இதில் மளிகை
பொருட்களான கோதுமை மாவு மற்றும் மசாலா பொருட்கள் முதல் அல்சர், சர்க்கரை நோய் போன்ற
நோய்கள் தீர்க்கும் மருந்துகளும் உற்பத்தி செய்து மலிவு விலையில் விற்பனை
செய்யபடுகின்றன. இவை நம் உடலுக்கு கெடுதல் வராமல் இருப்பதோடு உடல் ஆரோக்கியமாக
இருக்கவும் உதவுகின்றன. அதிக அளவில் உற்பத்தி செய்து அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுவதால் இந்தியாவில் இவற்றின் விலைகள் மற்ற
பொருட்களின் விலைகளை விட மிக குறைவாகவே இருப்பது மற்றொரு சிறப்பம்சம்.
ஆர்கானிக் பொருட்களை தேர்ந்தெடுபோம், ஆரோக்கியமான வாழ்வை பெற்றிடுவோம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.