Sunday, 7 December 2014

இது "நல்ல' வாழைப்பழமல்ல!

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஒரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள்  வாழைப்பழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

காரணம் தற்போது பெரும்பாலானோர் உடலில் - தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரகக் கற்கள், அடிக்கடி தலைவலி, ஃபுட் பாய்சன்... என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள்தான்.

இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை நாடன், ரஸ்தாளி, மலைப்பழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூரவள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப்பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும். இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும் , மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச்சிக்கலால் அவதிப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.

இந்த இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும். இவற்றை பூச்சுக் கொல்லிகளைப் பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்துவார்கள். ஆனால் பூச்சிக் கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக, பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழை மரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். இதைத்தான் நாம் பி.டி.வாழை என்று அழைக்கிறோம்.


"கேவின்டிஷ்' என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் திருட்டுத்தனமாக விற்கப்படுகிறது.  இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழத்தை பயிரிடவோ, விற்கவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த கேவின் டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூரு வாழைப்பழம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது. மாதக்கணக்கில்  வைத்திருந்து விற்றாலும் கெட்டுப்போகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின்டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த வாழைப்பழம்  ருசியாக இருக்காது. அதனால் மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற மற்ற நகரங்களில் இதனை யாரும் விரும்புவதில்லை.


செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட இந்த வகையான மரபணு மாற்று  காய்கறிகள், பழங்கள்   தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோடு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறுநீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாக்கும்.

Translate