Monday, 17 December 2018

சிலை சொல்லும் செய்தி!


குதிரை மீது அமர்ந்திருக்கும் வீரர்களின் சிலைகளை நம்மில் பலர் பார்த்திருப்போம்.  அதற்கு பின்னால் சில தகவல்கள் உண்டு.  அதை காண்போம் –


பூங்காவிலோ, பொது இடத்திலோ இரண்டு முன்னங்கால்களைத் தூக்கியபடி நிற்கும் குதிரையின்  மீது ஒருவர் அமர்ந்திருப்பதுபோல சிலை இருந்தால், அவர் போர்க்களத்தில் வீர மரணம் எய்தினார் என்று பொருள்.


முன்னங்கால்களில் ஒன்றை மட்டும் தூக்கிய நிலையில் இருக்கும் குதிரையில் அந்த வீரர் அமர்ந்திருந்தால், போர்க்களத்தில் படுகாயம் அடைந்து இறந்தார் என்று பொருள்.


நான்கு கால்களும் தரையில் பதிந்து சாதாரண நிலையில் இருந்தால், குதிரையில் மீது இருக்கும் வீரர் இயற்கையான முறையில் மரணம் எய்தினார் என்று பொருள்.

Translate