Sunday, 24 February 2019

பரிசும் கண்டிப்பும்!


     2014ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், ஈரோடு புத்தகத் திருவிழாவில் அப்துல்கலாம் பங்கேற்று உறையாற்றினார்.  அவரது பேச்சால் கவரப்பட்ட ஒரு அன்பர் கலாம் புறப்படும்போது அவருக்கு ஒரு வெட் கிரைண்டர் பரிசாக அளித்தார்.

     பரிசை வழங்கிய அன்பரிடம் கலாம், “எங்கள் வீட்டிற்கு வெட்கிரைண்டர் தேவைதான்.  ஆனால் இதனை நான் பரிசாக பெற்றுக்கொள்ளமாட்டேன்.  இதற்கான தொகையை செலுத்திவிட்டுதான் பெற்றுக்கொள்வேன்” என்று கூறி கிரைண்டருக்கான தொகைக்கு ஒரு காசோலையை எழுதி தன் உதவியாளரிடம் தந்து அதை பரிசளித்த அன்பரிடம் தரச்சொன்னார். 

     பரிசளித்த அன்பரோ காசோலையை வங்கியில் செலுத்தவே இல்லை.  அதற்கு காரணம், அது அப்துல்கலாம் கையொப்பம் இட்ட காசோலை என்பதால்.  காசோலையை பொக்கிஷமாக தன்னிடமே வைத்துக்கொண்டார்.  இரண்டு மாதங்கள் சென்றன.

     கலாமின் அலுவலகத்தில் இருந்து பரிசளித்த அன்பருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.  “கிரைண்டர் வாங்கியதற்கான காசோலையை நீங்கள் இதுவரை வங்கியில் செலுத்தி பணம் பெறவே இல்லை.  நீங்கள் பணம் பெறாவிட்டால் இதுவரை பயன்படுத்தாமல் வைத்துள்ள வெட்கிரைண்டரை திருப்பி அனுப்புமாறு கலாம் சார் கூறிவிட்டார்...” என்று தெரிவித்தனர்.

     இதை அடுத்து வேறு வழியில்லாமல் பரிசளித்தவர் காசோலையை வங்கியில் செலுத்தி பணம் பெற்றுக்கொண்டார்.

Friday, 15 February 2019

உடலின் மொழி

உணவை கேட்கும் மொழி பசி

தண்ணீரை கேட்கும் மொழி தாகம்

ஓய்வை கேட்கும் மொழி சோர்வு, தலைவலி

நுரையீரலை தூய்மை செய்யும் மொழி,  தும்மல், சளி, இருமல்

உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி காய்ச்சல்

காய்ச்சலின் போது எதுவும் உண்ணாதே என்று சொல்லும் மொழி வாய் கசப்பு மற்றும் பசியின்மை

காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே, என்று சொல்லும் மொழி உடல் அசதி

எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி வாந்தி

நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி பேதி

இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி வியர்வை

நான் வெப்ப நிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன்  என்று சொல்லும் மொழி உறக்கம்

நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி சிறுநீர்க் கழித்தல்

உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி மலம் கழித்தல்

உணவெல்லாம் மருந்தே!


ரசமரக்காற்று ஆண்மை விருத்திக்கு

லமரவிழுது இளமைப் பொலிவுக்கு

ஞ்சிச்சாறு இதயத்தின் பலத்துக்கு

ரலுக்கும், கல்லீரலுக்கும் சீனிக்கிழங்கு

ளுந்தம்பருப்பு உடற்பெருக்கத்துக்கு

றவைத்த பயிறுவகை சதைகளின் வளர்ச்சிக்கு

ண்ணெய் வித்துக்கள் மூட்டின் பாதுகாப்புக்கு

ராளம் கீரையிருக்கு ஒவ்வொண்ணும் வைத்தியனே

ம்புலனின் வளர்ச்சிக்கும், ஆரஞ்சுப்பழமிருக்கு

ருநாள் ஒருகனி எடு, உடலுக்கு வலுகொடு.. இரத்த

ட்டம் நிற்காதே நித்தம் நீ எடுக்க

வைக்கு அதியமான் அன்பளிப்பாய் அளித்த நெல்லிக்கனி


________________________________________________________________


சாமை சோறு, ஆமை ஆயுள்!
குதிரைவாலி தந்திடுமே
குறைவில்லா வாழ்வு!
கோல்ஊன்றி நடப்பவரும்
கம்மங்கூழால் காலூன்றி நடப்பார்.
திணை உண்டால்
தேக்குபோல் உடல்வலு உண்டாகும்.
வரும் நோய்தனை
வரகால் விரட்டு.
ராகியால் பலகாரம்
கால்சியத்தின் அதிகாரம்


Translate