அரசமரக்காற்று ஆண்மை விருத்திக்கு
ஆலமரவிழுது இளமைப் பொலிவுக்கு
இஞ்சிச்சாறு இதயத்தின் பலத்துக்கு
ஈரலுக்கும், கல்லீரலுக்கும் சீனிக்கிழங்கு
உளுந்தம்பருப்பு உடற்பெருக்கத்துக்கு
ஊறவைத்த பயிறுவகை சதைகளின் வளர்ச்சிக்கு
எண்ணெய் வித்துக்கள் மூட்டின் பாதுகாப்புக்கு
ஏராளம் கீரையிருக்கு ஒவ்வொண்ணும் வைத்தியனே
ஐம்புலனின் வளர்ச்சிக்கும், ஆரஞ்சுப்பழமிருக்கு
ஒருநாள் ஒருகனி எடு, உடலுக்கு வலுகொடு.. இரத்த
ஓட்டம் நிற்காதே நித்தம் நீ எடுக்க
ஔவைக்கு அதியமான் அன்பளிப்பாய் அளித்த நெல்லிக்கனி
________________________________________________________________
சாமை சோறு, ஆமை ஆயுள்!
குதிரைவாலி தந்திடுமே
குறைவில்லா வாழ்வு!
கோல்ஊன்றி நடப்பவரும்
கம்மங்கூழால் காலூன்றி நடப்பார்.
திணை உண்டால்
தேக்குபோல் உடல்வலு உண்டாகும்.
வரும் நோய்தனை
வரகால் விரட்டு.
ராகியால் பலகாரம்
கால்சியத்தின் அதிகாரம்