மதுரையில், டி. கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குச் சீருடை வேட்டிச்சட்டை தான்!
இந்திய சுதந்திரம் பெறுவதற்குச் சரியாக நான்கு நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளி இது.
அந்த பள்ளியின் மாணவர்கள், சாலையில் அணி அணியாக நடந்து வந்தால், ஏதோ அரசியல் ஊர்வலமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
அவர்கள் உடுத்தி இருப்பது சாரதி வேட்டியோ, பாலியஸ்டர் வேட்டியோ கிடையாது.
கதர் வேட்டிதான்.
வேட்டிகளைத் துவைக்க கதர் சோப் தயாரிக்கும் முறையையும் பள்ளியிலேயே கற்றுக் கொடுக்கிறார்கள்.
பள்ளிகளில் ஆசிரியைகளை 'அக்கா' என்றும் ஆசிரியர்களை 'ஐயா' என்றும் உறவு சொல்லி அழைக்கிறார்கள் மாணவ மாணவிகள்.
மாணவர்கள் வேட்டி அணிவதை போல, மாணவிகள் பாவாடை தாவணி அணிகிறார்கள்.
திங்கக்கிழமை தோறும் நடைபெறும் கொடி வணக்கத்தின்போது, பல்வேறு தேசபக்திப் பாடல்களை மாணவர்கள் பாடுவார்கள்.
புதன்தோறும் நடைபெறும் சர்வசமயப் பிரார்த்தனைக் கூட்டத்தில் பைபிள், பகவத்கீதை, குர்ஆன், திருக்குறளையும் சேர்த்து வாசிப்பார்கள்.
இந்திய சுதந்திரம் பெறுவதற்குச் சரியாக நான்கு நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளி இது.
அந்த பள்ளியின் மாணவர்கள், சாலையில் அணி அணியாக நடந்து வந்தால், ஏதோ அரசியல் ஊர்வலமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
அவர்கள் உடுத்தி இருப்பது சாரதி வேட்டியோ, பாலியஸ்டர் வேட்டியோ கிடையாது.
கதர் வேட்டிதான்.
வேட்டிகளைத் துவைக்க கதர் சோப் தயாரிக்கும் முறையையும் பள்ளியிலேயே கற்றுக் கொடுக்கிறார்கள்.
பள்ளிகளில் ஆசிரியைகளை 'அக்கா' என்றும் ஆசிரியர்களை 'ஐயா' என்றும் உறவு சொல்லி அழைக்கிறார்கள் மாணவ மாணவிகள்.
மாணவர்கள் வேட்டி அணிவதை போல, மாணவிகள் பாவாடை தாவணி அணிகிறார்கள்.
திங்கக்கிழமை தோறும் நடைபெறும் கொடி வணக்கத்தின்போது, பல்வேறு தேசபக்திப் பாடல்களை மாணவர்கள் பாடுவார்கள்.
புதன்தோறும் நடைபெறும் சர்வசமயப் பிரார்த்தனைக் கூட்டத்தில் பைபிள், பகவத்கீதை, குர்ஆன், திருக்குறளையும் சேர்த்து வாசிப்பார்கள்.