Monday, 24 May 2021

Psychologists Recommendations

 


ரச வகைகள்...










இட்லி டிபிஸ்...

இட்லியை குறுக்குவாட்டில் வெட்டி அதில் தக்காளிச் சட்னி அல்லது புதினா சட்னி தடவி மூடினால் அருமையான இட்லி சாண்ட்விச் தயார்.

இட்லி தட்டில் சிறிது மாவை விட்டு அதன் மேல் கெட்டி உருளைக்கிழங்கு மசாலா வைத்து மேலும் சிறிது மாவால் மூடி வேக வைத்தால் ஸ்டஃப்டு இட்லி தயார்.

கோபி மஞ்சூரியன் செய்வது போலவே இட்லித் துண்டுகளை வறுத்துப் போட்டு இட்லி மஞ்சூரியன் செய்யலாம்.

புளித்த இட்லி மாவை இட்லிகளாக வார்த்து விரல் பருமனுக்கு வெட்டி பொரித்தெடுத்து, உப்பு, மிளக்காய் பொடி, கரம் மசாலாத்தூள் தூவினால் இட்லி பிங்கர் சிப்ஸ் தயார்.

இட்லியை துண்டுகளாக்கி காய வைத்து பொரித்தால் கூழ் வத்தலைவிட சுவையாக இருக்கும்.

Sunday, 23 May 2021

ஆரோக்கியம் காக்க...

தினமும் காலையில் 1 - 2 சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் எந்த நோயும் அணுகாதபடி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

முருங்கைக் கீரையை சமைத்து சாப்பிட்டாலும், சூப் வைத்து குடித்தாலும் இலையை காய வைத்து பொடியாக்கி எலுமிச்சை, தேன், வெல்லம் சேர்த்து டீ போட்டு குடித்தாலும் இடுப்பு வலி போன்ற வலிகள் குறைவதோடு, கண்பார்வை நன்கு தெரியும், ரத்த விருத்தி மற்றும் இரும்பு சக்தி கிடைக்கும்.

அதிக இருமல் ஏற்படும்போது ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.

குழந்தைகளுக்கு வரும் இருமலை வெற்றிலைச்சாறு மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவையை தொண்டை பகுதியில் தடவுவதன் மூலம் குணமாக்கலாம்.

வெற்றிலையை உணவுக்குப் பின் உண்டால் நல்ல செரிமானம் ஆகும்.  வெற்றிலையுடன் மிளகு சேர்த்துத் தயாரிக்கப்படும் கஷாயம் உணவு செரிமானத்துக்கும் சளி, கபம் போன்ற வற்றுக்கும் விஷ முறிவுக்கும் அருமருந்து.

வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் மடிந்துவிடும்.  நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

அசைவ உணவிற்கு பிறகு சிறுதுண்டு வெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

வேப்பம்பூவை நெய்யில் வதக்கி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அல்சர் நோய் குணமாகும்.

பேரீச்சம்பழத்தில் கொட்டை நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கி பாலில் சேர்த்து கலந்து, தேன், ஏலக்காய், குங்குமப்பூ கலந்து குடித்து வர உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.

நாணய ரகசியம்

 இந்திய ரூபாய் நோட்டுக்கள் நாசிக் நகரத்தில் அச்சிடப் படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.  ஆனால் இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன?  இந்திய நாணயங்கள் இந்தியாவில் நான்கு இடங்களில் தயாரிக்கப்படுகின்றன.  தில்லி, மும்பை கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களே அவை.  நாம் புழங்கும் நாணயங்களில் அவற்றின் குறியீடுகள் உள்ளன எனபது உங்களுக்கு தெரியுமா?


நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிட்டிருக்கும் அல்லவா?... அதன் அடியில் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும்.  அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறிய முடியும்.  


நாணயத்தில் உள்ள ஆண்டுக்கு கீழே ஒரு புள்ளிக் குறி இருந்தால் அது டெல்லியிலும், டைமண்ட் குறி இருந்தால் அது மும்பையிலும், நட்ச்சத்திரக் குறி இருந்தால் அது ஹைதராபாத்திலும், எந்தக் குறியீடும் இல்லாமலிருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது என்று அர்த்தம்.

Smile with Short stories


 

Language Translator

 


Translate