Sunday, 23 May 2021

ஆரோக்கியம் காக்க...

தினமும் காலையில் 1 - 2 சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் எந்த நோயும் அணுகாதபடி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

முருங்கைக் கீரையை சமைத்து சாப்பிட்டாலும், சூப் வைத்து குடித்தாலும் இலையை காய வைத்து பொடியாக்கி எலுமிச்சை, தேன், வெல்லம் சேர்த்து டீ போட்டு குடித்தாலும் இடுப்பு வலி போன்ற வலிகள் குறைவதோடு, கண்பார்வை நன்கு தெரியும், ரத்த விருத்தி மற்றும் இரும்பு சக்தி கிடைக்கும்.

அதிக இருமல் ஏற்படும்போது ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.

குழந்தைகளுக்கு வரும் இருமலை வெற்றிலைச்சாறு மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவையை தொண்டை பகுதியில் தடவுவதன் மூலம் குணமாக்கலாம்.

வெற்றிலையை உணவுக்குப் பின் உண்டால் நல்ல செரிமானம் ஆகும்.  வெற்றிலையுடன் மிளகு சேர்த்துத் தயாரிக்கப்படும் கஷாயம் உணவு செரிமானத்துக்கும் சளி, கபம் போன்ற வற்றுக்கும் விஷ முறிவுக்கும் அருமருந்து.

வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் மடிந்துவிடும்.  நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

அசைவ உணவிற்கு பிறகு சிறுதுண்டு வெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

வேப்பம்பூவை நெய்யில் வதக்கி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அல்சர் நோய் குணமாகும்.

பேரீச்சம்பழத்தில் கொட்டை நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கி பாலில் சேர்த்து கலந்து, தேன், ஏலக்காய், குங்குமப்பூ கலந்து குடித்து வர உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.

Translate