மூங்கில் ஒரு சுற்றுச்சூழல் நண்பன். ஒரு மூங்கில் மரமானது தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிட்டுக் காற்றைச் சத்தமாக்குகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சி மலர் பூக்கும், மூங்கிலோ 40 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூக்கும். மூங்கில் பூவுக்குள் அரிசி இருக்கும்.
- மூங்கில் அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்
- உடலை வலுவாக்கும்
- மூங்கில் அரிசியையும், குருத்தையும் உணவாக உட்கொண்டால், சர்க்கரை நோயால் உருக்குலைந்த உடல் கூட உறுதி பெறும்
- நார்ச்சத்துக்கள் அதிகமிருப்பதால், நீரழிவுநோய், புற்றுநோய், இதய நோய்கள், மலச்சிக்கல் எல்லாவற்றுக்கும் மூங்கில் அரிசி எதிரி
- கொழுப்புச்சத்தைக் குறைக்கும். எனவே உடல் எடை குறைக்க விரும்புவோர் இதனை தொடர்ந்து பயன்படுத்தலாம்
- அல்சர் வராது
- நரம்புத்தளர்ச்சியைப் போக்கும்
- பொட்டாஷியம் நிறைந்து உள்ளதால் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்
- சின்ன முத்து நோய் (Measles) வந்தவர்கள் மூங்கில் அரிசியில் சூப் செய்து அருந்தினால் விரைவில் நோயின் வீரியம் குறையும்
